Pages

Monday, March 09, 2009

தஸ்விதான்யா (The Best Goodbye Ever)

சமீபத்தில் தஸ்விதான்யா என்றொரு ஹிந்திப் படம் பார்த்தேன்..
இன்னும் சில நாட்களில் இறந்து போய்விடுவோம் என்று தெரியவருகிற ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய இறுதி ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதாக படம் போகிறது..
குறை சொல்ல முடியாத அளவிற்கு ஒரு நல்ல படம்..

படத்தைப் பார்த்த பிறகு, நமக்கு இது போல் என்னென்ன ஆசைகள் இருக்கின்றன என்று யோசித்துப்பார்த்தேன்..
அவ்வளவாக ஒன்றும் தேறவில்லை..
என்னுடைய அதிகபட்ச ஆசை என்னவாக இருக்குமென்று பார்த்தால், தினமும் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அலுவலகத்திற்க்குச் சென்றுவருவதாகத்தான் இருக்கும்..

"ஆசைகள் அற்ற இடத்தில் துன்பங்கள் அற்றுவிடும்" என்கிறார் புத்தர்..
(அதே புத்தர், ஆசைப்படாமல் இருப்பதற்கு ஆசைப்பட்டார் என்பது வேறு விஷயம்)..அப்படி என்றால் எனக்கு துன்பங்களே இல்லையா என்று கேட்டால், எக்கச்சக்கமாக உண்டு..

வாழ்வில் பெரிதாக நிறைவேற்றவேண்டிய அளவிற்கு எனக்கொன்றும் கடமைகள் இல்லை..
பிறகு எதற்காக நான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்?
என்னுடைய இலக்கு என்ன?
எதை நோக்கி நான் போய்க்கொண்டிருக்கிறேன்?
ஒன்றுமே தெரியவில்லை..

சாதாரணமாக ஒரு படத்தைப் பார்த்து விட்டு இவ்வளவு தூரம் யோசிப்பது எனக்கே கொஞ்சம் அதிகம் போல்தான் தெரிகிறது.. என்ன செய்வது.. யோசித்துவிட்டேன்.. அதனால் எழுதியும் விட்டேன்..

நன்றி!!