Pages

Wednesday, September 28, 2011

மறந்து போன பாடல்கள்..

கடந்த ஒரு வாரமாக "சதுரங்கம்" திரைப்படம் - விரைவில் என்கிற விளம்பரம் பத்திரிக்கைகளில்..



சற்று பின்னோக்கி திரும்பிப் பார்க்கிறேன்..
நான் இறுதி ஆண்டு முதுகலை பயிலும் பொழுது சதுரங்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.. பார்த்திபன் கனவு என்கிற அருமையான திரைப்படத்திற்குப் பிறகு கரு. பழனியப்பன் இயக்கிய படம் - இதழியலை (Journalism) மையமாகக்கொண்ட ஒரு ஆக்க்ஷன் த்ரில்லர் - அப்பொழுது உச்சத்தில் இருந்த வித்யாசாகர் இசை - என்று அந்தத் திரைப்படத்தைப்பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..
பாடல்களும் மிக அருமையாக வந்திருந்தது..
பின்வரும் இந்த இரு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்துப்போய் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன் அந்த காலகட்டங்களில்..
"கார்த்திக்/ ஸ்ரீலேகா பாடிய - எங்கே எங்கே என் வெண்ணிலவு"
"மது பாலகிருஷ்ணன்/ ஹரிணி பாடிய - விழியும் விழியும் நெருங்கும் பொழுது"


கிட்ட தட்ட ஆறரை வருடங்கள் ஓடிவிட்ட பிறகு இப்பொழுது படம் வெளியிடப்பட்டுகிறது..
படம் வெற்றிபெறுமா? ரசிகர்களை கவருமா? - தெரியவில்லை..
ஆனால் நான் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பேன்..

சதுரங்கம் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சதுரங்கத்தைப் பற்றி பேசுகிற பொழுது ஞாபகம் வருகிற மற்றுமொரு திரைப்படம் "காதல் சாம்ராஜ்யம்"..



பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் தயாரிக்க, தேசிய விருது பெற்று உச்சத்தில் இருந்த அகத்தியன் இயக்க, யுவன் (தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இருந்தபொழுது) இசையமைமக்க, முழுக்க முழுக்க இளைஞர்களைக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.. அருமையாக விளம்பரம் செய்து பாடல்களை வெளியிட்டார்கள்.. அனைத்து பாடல்களுமே அருமையாக இருந்தது..
இது நான் இளங்கலை முடித்து முதுகலை பயில ஆரம்பித்திருந்த காலகட்டம்.. எங்களுடைய விடுதி அறையில் இந்தப்பாடல்கள் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது..
என்னுடைய விருப்பத் தேர்வாக இருந்த பாடல்கள்..
பல்ராம்/கோபிகா பாடிய - இரு கண்கள் சொல்லும் காதல் சேதி"
சங்கர் மகாதேவன் பாடிய - "கல்லூரி பாடம் மாற்றுங்கள்"
எஸ்.பி.பாலசுப்ரமணியம்/ சுஜாதா பாடிய - "சித்தன்ன வாசல் சித்திரம் போல உனையார் வரைந்தாரோ"

பாடல்கள் தவிர, ஒலிநாடாவில் இடம்பெற்றிருந்த "சல்சா தீம்" என்ற இசை கோர்வையும் எனக்கு பிடிக்கும்..

சதுரங்கதைப் போலவே, இந்தப்படமும் முழுமையாக எடுக்கப்பட்டு இன்றுவரையிலும் வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கிறது..

காதல் சாம்ராஜ்யம் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதைப்போலவே, நான் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது வெளிவந்த பாடல்கள் கோடீஸ்வரன் என்ற படத்தினுடையது..

அப்பொழு பிரபல தயாரிப்பாளராக இருந்த கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில், அவரது மகன் எபி குஞ்சுமோனும், சிம்ரனும் நடிக்க, அகோஷ் என்று அழைக்கப்பட்ட மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைப்பில் வெளிவந்தது.. படத்தின் பாடல்கள் அப்பொழுது சற்று நன்றாகவே வரவேற்ப்பை பெற்றது.. ஆகோஷ் இசையமைப்பில் அதற்க்கு முன்னர் வந்த ஹரிச்சந்திரா (கார்த்திக், மீனா நடித்தது) படத்தில் பாடல்கள் நன்றாக இருந்த காரணத்தினால் கோடீஸ்வரன் பாடல்களையும் நான் வாங்கி கேட்டேன்.. "தாம் தரிகிட தோம்" என்ற பாடல் எனக்கு அன்றைய விருப்பபாடல்.. மனோ பாடிய "அடி கண்ணே" என்கிற பாடலும் எனக்கு பிடிக்கும்..முந்தய இரு படங்களிப்போல் அல்லாமல் இந்தப்படம் படப்பிடிப்பே நிறைவு பெறாமல் நின்று விட்டது..

கோடீஸ்வரன் திரைப்படத்தின் பாடல்களை இங்கே கேட்கலாம்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நம் இசைஞானி விஷயத்தில் இப்படி பல பாடல்கள் படங்களிலிருந்து வெட்டுபட்டிருக்கின்றன.. அவற்றில் நான் இன்றும் அடிக்கடி கேட்கும் பாடல்கள் சில..
அலைகள் ஓய்வதில்லை - ஜானகியின் குரலில் "புத்தம் புது காலை, பொன்னிற வேளை"..
தளபதி - ஜானகி, யேசுதாசின் குரலில் "புத்தம் புது பூ பூத்ததோ"..
ராஜாதி ராஜா - பி.சுசிலா, சித்ராவின் குரலில் "என் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா"


இப்படியாக பல பாடல்கள்- நான் கேட்டு ரசித்து, பின்னாளில் திரையில் வராமலேயே போய்விட்டது..

நன்றி !!