Pages

Sunday, December 11, 2011

அன்றும் இன்றும்..


அன்று:
அப்போது எனக்கு சுமார்  பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும்.. லேசாக உதட்டின் மேல் மீசை அரும்பி விட்டிருந்த நேரம்..பள்ளியிலும், வெளியிலும் அனைவரும் என்னை பெயர் சொல்லியோ அல்லது வாடா/போடா என்றோ தான் அழைத்ததுண்டு.. வீட்டில் அனைவரும் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள்..தாத்தா மட்டும் சில நேரங்களில் என்னை அன்பாக 'என்னங்கையா' என்று அழைப்பர்..

ஒருநாள்,.வீட்டினருகே இருந்த ஒரு மளிகை கடையில் ஏதோ வாங்குவதற்காக சென்றிருந்தேன்.. கடையில் வழக்கமாக இருக்கும் அண்ணாச்சிக்கு பதில் அன்று வேறு ஒரு பெரியவர் இருந்தார்.. வீட்டில் என்னென வாங்க வேண்டும் என்று எழுதி குடுத்த சீட்டை அவரிடம் நீட்டினேன்..நான் கேட்ட சரக்கையெல்லாம் கட்டிகொடுத்து விட்டு,  "மொத்தம் எழுபத்தஞ்சு  ருபா ஆகிருச்சு சார்" என்று சொல்லி என்னிடம் பணத்தை கேட்டார்..ஒன்றும் புரியாமல் சற்றே முழித்தவாறு அவரை உற்று நோக்கினேன்.. "எழுபத்தஞ்சு  ருபாய் சார்" என்று சற்று உரக்க சொன்னார்..

அவரை பார்த்து நான் முழித்ததன் காரணம்?
என் வாழ்வில் முதன் முறையாக சார் அன்று ஒருவர் அழைத்தது அது தான் முதல் முறை.. அன்றைக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.. பெரிதாக ஏதோ சாதித்து விட்டதை போன்று ஒரு நினைப்பு மனதிற்குள்..சற்றும் வளர்ந்தேயிராத என் மீசையை தடவி விட்டுக்கொண்டே வீட்டுக்கு திரும்பினேன்..தெருவில் வரும் வழியிலெல்லாம், எல்லாரும் என்னை ஏதோ ஒரு பெரிய மனுஷனை பார்ப்பது போல பார்பதாகவே எனக்கு தோன்றியது..
"ஒரு வழியாக நம் பால்ய பிராயம் முடிந்தது.. நாம் இளைஞன் ஆகிவிட்டோம்" என்றெல்லாம் அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்..

இன்று:
இரண்டு வாரங்களுக்கு என் வயது முப்பதை எட்டியிருந்தது..
வழக்கமாக நான் அலுவலகத்திற்கு கேபில் (Office Cab) தான் செல்வதுண்டு..
இரண்டு மூன்று வாரமாக புதிதாக ஒருவர் என்னுடன் கேபில் வந்து கொண்டிருக்கிறார்.. அவ்வளவாக பழகவில்லை அவருடன் என்றாலும், அவ்வபோது சில நேரங்களில் சில விஷயங்கள் பேசுவதுண்டு..என்னை பெயர் சொல்லி வாங்க/போங்க என்றே பேசுவார்..
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் என்னுடன் வரவில்லை.. அடுத்த நாள் அவரை பார்த்த பொழுது, "என்னங்க, நேத்து வரல?" என்று சாதாரணமாக கேட்டேன்..  அவர் அதற்க்கு சிரித்தவாறே, "பிரசன்னா சார் , உங்களுக்கு அதெல்லாம் சொன்ன புரியாது" என்று சொல்லிவிட்டு, நான் அதற்க்கு பதில் கேள்வி கேட்பேன் என்று எதிர்பார்த்து நின்றார்..நான் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் சிரித்தவாறே அந்த இடத்தை விட்டு நகர்தேன்..

நான் ஏன் அவருடன் பேச்சை வளர்க்கவில்லை?
காரணம் - அவர் சார் என்று என்னை கூப்பிட்டதும்  எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அதனாலே தான் அந்த இடத்தை விட்டு அகன்றேன் என்பது தான் உண்மை.. அன்றிரவு வரை ஏதோ ஒன்றை இழந்தது போல் வெறுமையாக இருந்தேன்..முன்பு என்னை ஒருவர் சார் என்று அளித்த போது ஏற்பட்ட அந்த மகிழ்ச்சி, இன்று சற்று அதிர்ச்சியாக மாறியது ஏன்?
கடந்த மாதம் தான் என் வயது முப்பதை தொட்டிருந்தது  - அதனாலா?
இருந்தும் சார் என்ற வார்த்தையை என் மனம் ஏன் ஏற்க மறுத்தது என்று அந்த தருணத்தில் எனக்கு தெரியவில்லை..

பின்பு பலவாறான கோணங்களில் யோசித்து பார்த்து தெளிவு பெற்றேன்.. அவர் சாதாரணமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ ஏதோ ஒன்றை சொல்ல வந்திருப்பார்.. அவருக்கு கண்டிப்பாக என்னைவிட ஓரிரண்டு வயது குறைவாக தான் இருக்கும்.. அவர் என்னை சார் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது.. வயது மூப்பு என்பது மனிதரை பிறந்த அனைவருக்கும் வந்தே தீரும்..எவரும் அதற்க்கு விலக்கில்லை..முப்பது என்பது அப்படி ஒன்றும் தளர்த்த வயதும் அல்லவே.. பின், ஏன் இது போன்ற தாறுமாறான சிந்தனைகள்? மனிதரனைவருக்கும்  பொதுவாக, இயற்கையாக நிகழும் விஷயங்களை நாம்ஏற்று கொள்ளத்தான் வேண்டும் அல்லவா:-)

"Do not regret growing older.  It is a privilege denied to many" - (Unknown Author).. 

நன்றி!!

3 comments:

  1. Pirarukaga naam vaazha villai nanbare...Andru ungali mathithu sir endru koopitavargal indru keli kooda seivargal...

    Anaal ungalin karpanai nandru...

    ReplyDelete
  2. "Andru ungali mathithu sir endru koopitavargal indru keli kooda seivargal"
    >> என்னைய கேலி பண்றதுக்கு எடுத்து குடுக்குறீங்க போல தெரியுதே.. :-)

    ReplyDelete