Pages

Tuesday, December 13, 2011

தனிமையின் நீட்சி


"மாற்றம் ஒன்றிற்கு தான் மாற்றமே இல்லை", "Changes are Inevitable" போன்ற வாக்கியங்களின் மேல் எனக்கு நம்பிக்கையே இருந்ததில்லை..
நான் செய்து கொண்டிருக்கின்ற/பழகிக் கொண்ட விஷயங்கள் என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டு விட்டால் அவற்றிலிருந்து என்னை மாற்றிக் கொள்ள முயன்றதே இல்லை.. என்னை சுற்றி நடக்கும் பல மாற்றங்களை, புதிய தோன்றல்களை நான் ஏற்றுக்கொண்டு அனுசரித்து போனதே இல்லை..
<<அதற்காக நான் பிடிவாதமுள்ள கொள்கைகாரன் என்றோ, பழமை விரும்பி என்றோ அர்த்தம் கொள்ள வேண்டாம்.. :-) >>
"I am already in my comfort zone.. Why should i make it complicate by adhering new/updated things" - என்பது என்னளவில் எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வகையான நியாயம்..

ஆனால், சமீப காலமாக என்னை நான் ஒரு விஷயத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் - மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்து விட்டது..

நான் தனிமையை மிகவும் விரும்புபவன்.. தனிமையிலே இனிமை காண்பது எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமான ஒன்று..
சிறு வயது முதலே தனிமையை சிலாகிப்பது தான் என் சுபாவம் என்றாலும் நான் தனிமையின் உச்சத்தை தொட்டதற்கு -"எதற்கு புதிய உறவுகள் என்ற எண்ணம்", "சக மனிதர்கள் மூலம் என் வாழ்வில் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள்" போன்ற வேறு சில காரணங்களும் உண்டு..
இதே சென்னையில் தான் எனது பெற்றோர்/உடன் பிறந்தோர் இருகின்றார்கள்.. இருந்தாலும் நான் எனக்கு பிடித்த அந்த தனிமையை விரும்பி, தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி வருகிறேன்..
(இதை வைத்துக்கொண்டு என் குடும்பத்தின் மீது எனக்கு அன்பில்லை என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை)..

இப்படி நான் விரும்பிய தனிமை, கடந்த ஒரு வருட காலமாக என்னை வேறு ஒரு தளத்திற்கு  கொண்டு செல்ல ஆரமபித்தது..
அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி - சக மனிதர்களோடு பழகுவதை நான் அறவே தவிர்க்க ஆரம்பித்தேன்..
எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஆரம்பித்தேன்.. நாளடைவில் மிகப்பெரிய வெறுமை என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது..
எவருடனும் பேசாமல் பழகாமல் இருக்க ஆரம்பித்தன் விளைவு - எல்லா தருணங்களிலும் மனதில் பலவிதமான தேவையற்ற சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தது..
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானது போன்ற ஒரு உணர்வு..
ஒரு கட்டத்தில், இதன் உச்சமாக நான் வாய்திறந்து பேசக்கூட வாய்ப்புகள் குறைந்து போக ஆரம்பித்தது..
வீட்டிற்க்கு தொலைபேசியில் பேசுவதை தவிர்த்து பார்த்தால், நான் அதிகம் பேசுவது ஆங்கிலத்தில் (business talks i.e., பணி நிமித்தமான பேச்சுக்கள்) மட்டுமே என்றானது..
கிட்டதட்ட இந்த சுட்டியில் விவரிதிருப்பதை போன்ற ஒரு நிலையில் தான் நான் இருந்தேன்..


இதிலிருந்து என்னை நான் வெளியேற்றியே ஆகவேண்டும், நான் மாறியே ஆகவேண்டும் முடிவு செய்தேன்..

எப்படி? அதற்கு ஒரே வழிதான் உள்ளது.. எனக்கு பிடித்த தனிமையை விட்டுக் கொடுத்து விடாமல் இதிலிருந்து மீள வேண்டுமென்றால், சக மனிதர்களோடு பழக ஆரம்பிக்க வேண்டும்..
ஆம்.. கடந்த இரு மாத காலமாக. எந்த வித வேறுபாடும் இல்லாமல் நான் சந்திக்கும் அத்தனை மனிதர்களுடனும் சகஜமாக சிரித்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறேன்..
இப்பொழுது என்னை நான் ஓரளவு மீட்டு விட்டதாகவே உணர்கிறேன்..
என் இயல்பை மீறிய ஒரு விஷயத்தை தான் நான் செய்கிறேன் என்று எனக்கு தெரிகிறது.. ஆனாலும் கஷ்டப்பட்டு ஒருவாறாக என்னை நான் பழக்கிக் கொண்டு விட்டேன்..

முன்பு சொன்னதுபோல் எனக்கு பிடித்த தனிமையை என்றும் நான் விட்டு கொடுத்து விடப் போவதில்லை..
"தனியாக ஒரு உலகை படைத்தது, இந்த சமூகத்தில் வாழ்ந்த ஒரு மனிதனை அதில் விட்டுப் பாருங்கள்.. அவன் அங்கு தான் எந்த விதமான போலிதன்மையும் இல்லாமல் இருப்பான்"
"நான் தனியாக இருக்கும் இந்த வீடு என்பது என் உலகம்.. இங்கு தான் நான் யார் என்று என்னை நான் உணர்கிறேன்.. இங்கே தான் நான் நானாக இருக்கிறேன்.. என் வாழ்கையை நான் வாழ்கிறேன்.." போன்ற என் கருத்தில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை
அதே சமயம், இந்த தனிமையின் நீட்சி என்னை முழுமையாக ஆட்கொண்டு வேறு ஒரு அபாய கட்டத்திற்கு கொண்டுசென்று விட்டுவிடக்கூடாது என்பதில்  கவனமாக இருக்கிறேன்..

நன்றி!!

5 comments:

  1. நேற்று உங்களிடம் நான் பகிர்ந்த கொண்ட என் பிரச்சனை இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது..
    ஓரளவிற்கு மீட்டு விட்டேன் என்பதுவே உண்மை.. முழுமையாக அல்ல.. :-)

    ReplyDelete
  2. It'll be over too, pretty soon :)

    ReplyDelete
  3. This is really nice...
    You took a correct decision...Human is a social animal...Even animals are together...Human can not be alone...Its not good for any human...

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.. :-)

    ReplyDelete